மண்ணுக்குள் அப்படியே புதைந்த இரண்டு பேருந்துகள் : பயணிகளின் கடைசி நிமிடங்கள்!!

1210

 
நிலச்சரிவு ஏற்பட்டதில் சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு பேருந்துகள் மண்ணில் புதைந்ததையடுத்து 46 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாண்டி- பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது.

நேற்று அந்த வழியாக சென்று கொண்டிருந்த இரண்டு பயணிகள் பேருந்துகள் மண்ணில் அப்படியே புதைந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு குழுவினர் மண்ணில் புதைந்த 46 பேரின் சடலங்களை மீட்டனர்.

நிலச்சரி‌வில் மேலும் சில வாகனங்கள் புதையுண்டு போயிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது, தொடர்ந்து மீட்பு பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட முதல்வர் வீர்பத்ர சிங், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.