கொழும்பின் பல பகுதிகளுக்கும் இன்று 12 மணிநேர நீர் வெட்டு..!

536

waterகொழும்பு மற்றும் தெஹிவளை – கல்கிஸ்ஸை மாநகரசபைக்கு உட்பபட்ட சில பகுதிகளில் இன்று நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று முற்பகல் 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, சித்தம்பலம் ஏ காடினர் மாவத்தை மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து வீதிகளிலும், கொழும்பு துறைமுகம், டி.ஆர்.விஜேவர்த்தன மாவத்தை மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து வீதிகளுக்கும், 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் தெஹிவளை – கல்கிஸ்ஸை மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசங்கள் மற்றும் ரத்மலானை பகுதிகளுக்கு இன்று இரவு 9.00 மணிமுதல் ஞாயிறு காலை 5.00 மணிவரை 8 மணித்தியால நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.