வயிற்று வலியால் துடிதுடித்து இறந்த பெண்ணின் சாம்பலில் வெளிவந்த உண்மை!!

749

வயிற்று வலியால் துடிதுடித்து இறந்த பெண்ணின் சாம்பலில் இருந்து கத்தரிக்கோல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று அண்மையில் இந்தியாவில் நிகழ்ந்துள்ளது.

இந்தியா, ஹரியான மாநிலத்தில் நிர்மலா என்னும் 50 வயதுடைய பெண் வயிற்றுவலியால் துடித்துள்ளார். அவருடைய குடும்பத்தினர் அந்த பெண்ணின் வயிற்றுவலியை கண்டுகொள்ளவில்லை.

சிறிது நேரத்தில் அப்பெண் அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்து போயுள்ளார்.

அப்பெண்ணை யாரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமையினாலேயே அவர் இறந்து போயுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்பிறகு உயிரிழந்த குறித்த பெண்ணின் இறுதி சடங்குகள் நிறைவுற்றதன் பின்னர் அந்த பெண்ணை எரித்த இடத்தில் ஒரு அளவிலான கத்தரிக்கோல் சாம்பலுடன் காணப்பட்டுள்ளது.

பிறகுதான் தெரியவந்துள்ளது உயிரிழந்த பெண் கத்தரிக்கோலை விழுங்கியதாலேயே உயிரிழந்துள்ளார் என்று.

தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.