வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ஆத்மீக சுற்றுலா!!

1229

 
வவுனியாவில் இயங்கும் முதியோர் சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று (17.08.2017) வியாழக்கிழமை V3 அமைப்பின் அனுசரணையில் மாவட்ட சமூகசேவை அலுவலகமூடாக யாழ்ப்பாணம் அழைத்துச் செல்லப்பட்டார்கள். கூமாங்குளம் , வெளிக்குளம், பூந்தோட்டம் , வவுனியா நகரம் ஆகிய சங்கங்களின் பிரதிநிதிகளே இவ்வாறு பயணித்தனர்.

மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.ஸ்ரீநிவாசன் தலைமையில் மாவட்ட சமூகசேவை அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எஸ்.கே.வசந்தன் உளசமூகப் பணியாளர்கள் செல்வி இ.கிஸாந்தினி ஆகியோர் இதில் கலந்து மூத்தோருக்கு வழி காட்டிகளாக சேவை ஆற்றினர்.