வவுனியா பகவான் ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலையம் பல்வேறு வகையான சமூக சேவைகளை சத்தமின்றி சிறப்பாக ஆற்றி வருகின்றது என வவுனியா மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.ஸ்ரீநிவாசன் தெரிவித்தார்.
சாயி நிலையம் கூமாங்குளத்தில் உள்ள சாயி சிறுவர் இல்லம் என்பன இதில் குறிப்பிடத்தக்கன . இவை தவிர புட்டபர்த்தியில் உள்ள நதியான சித்ராவதி நதியின் பெயரில் நன்னீர் குடிநீர்த்திட்டத்தை கூமாங்குளத்தில் இலவசமாக ஆற்றிவருகின்றனர்.
ஈச்சங்குளம் மறவன் குளம் பகுதியில் இலவச மருத்துவ முகாம்களை கிரமமாக நடாத்தி வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் பயன் பெற்று வருகின்றனர். பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களின் கல்வி திட்டத்திற்கு நிதி பங்களிப்பு வழங்குதல், மனநலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர்உணவு விநியோகம் என பலதிட்டங்களை இந்நிலையம் செய்து வருகின்றது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
பலர் விசேட உணவுகளை வழங்கி இங்குள்ள சிறுவர்களை மகிழ்வித்து வரும் நிலையில் இன்று நோர்வே வாழ் கொக்குவிலைச் சேர்ந்த சோமரவீந்திரன் அருண் தனது பிறந்த நாளை இங்குள்ள சிறார்களுக்கு விசேட உணவு வழங்கி கொண்டாடியுள்ளார் .
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.ஸ்ரீநிவாசன் பகவான் ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலையத்தின் தற்போதைய தலைவர் அ.தவீசன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கே.வசந்தரூபன் ஆகியோருடன் இல்ல காப்பாளர் மகேந்திரன், இந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.














