என் சொந்த வாழ்க்கை பற்றி கேட்க யாருக்கும் உரிமை இல்லை – அனன்யா..!

260

ananyaஎன் சொந்த வாழ்க்கை பற்றி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்று கோபமாக பாய்கிறார் அனன்யா.
நாடோடிகள், எங்கேயும் எப்போதும், சீடன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் அனன்யா.

இவருக்கும், திருச்சூரை சேர்ந்த தொழில் அதிபர் ஆஞ்சநேயன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இதில் பிரச்னை ஏற்பட்டதையடுத்து திருமணம் தடைபட்டது.

ஆனாலும் இருவரும் ரகசியமாக சேர்ந்து வாழ்வதாக கிசுகிசு நிலவுகிறது.

திருமண சர்ச்சையால் படங்களில் நடிக்காமல் சில காலம் ஒதுங்கி இருந்த அனன்யா மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நல்ல கதை, நல்ல நிறுவனம் என்றால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்கிறேன்.

தற்போது மலையாளத்தில் நாடோடி மன்னன், தோம்சன் வில்லா படங்களில் நடிக்கிறேன் என்றும் கதாநாயகிகளுக்கு இடையேயான போட்டி பற்றி எனக்கு கவலை இல்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும் என் சொந்த வாழ்க்கை பற்றி கேள்விகள் வந்த வண்ணம் உள்ளன, அதுபற்றி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என கூறியுள்ளார்.