வவுனியா கூமாங்குளம் கிராம அபிவிருத்தி மற்றும் அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாக கலந்துரையாடல்!!

646

 
வவுனியா கூமாங்குளத்தில் நேற்று (20.08.2017) கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் புஸ்பராஜா தலைமையில் கிராம அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் வவுனியா நகரசபையின் முன்னாள் துணைத் முதல்வருமான சந்திரகுலசிங்கம் (மோகன்) கலந்து கொண்டு மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்தனர்.

அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் கூமாங்குளம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் S.புஸ்பராஜா, செயலாளர் மா.சுரேந்திரன், கூமாங்குளம் மரண உதவிச் சங்க தலைவர் பி.கணேசன், பொருளாளர் வே.நந்தபாலன், கூமாங்குளம் சித்தி விநாயகர் ஆலய தலைவர் ந.ஆறுமுகம், கூமாங்குளம் அஸ்திரம் இளைஞர் கழக தலைவர் நா.ஸ்ரீதரன், கூமாங்குளம் கிரம அபிவிருத்தி சங்க நிர்வாக உறுப்பினர்கள் சோ.துரைராஜ், மு.குருசாமி ஆகியோருடன் சமூகமட்ட அமைப்புகள் மற்றும் கிராம மக்கள் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.