ஒரு நடிகைக்கு தருகிற முக்கியத்துவத்தை இந்த நாடு ஒரு நடிகருக்கு தரவே மாட்டேங்குதே என வருதத்தில் ஆழ்ந்துள்ளாராம் கருணாஸ்.
ஏனென்றால் கருணாஸ் காமராஜரை பற்றி தவறாக பேசிவிட்டார் என்று ஒரு வார இதழில் செய்தி வந்ததால் பெரும் பிரச்சினை ஏற்பட்டது.
தினந்தோறும் ஏதாவது ஒரு அமைப்பு அவரது வீட்டுக்கு முன் போராட்டம் நடத்தி கோஷம் போட்டுவிட்டு கலைகிறது. இதில் மிகவும் நொந்துபோனார் கருணாஸ்.
வேறு வழியில்லாமல் கடந்த சில தினங்களுக்கு முன் பொலிஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை மிரட்டுவதாக புகார் கொடுத்துவிட்டு போனார்.
இவர் போய் திரும்பும்வரை ஒன்றிரண்டு பத்திரிகையாளர்களை தவிர, வேறு யாரும் இவரை கண்டு கொள்ளவில்லையாம். ஆனால், நடிகை நஸ்ரியா இதே அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வருகிறார் என்றதும், கூட்டங்களை கட்டுப்படுத்துகிற பேரிகார்டுகளை கொண்டு வந்து இறக்கினார்களாம்.
அவரை புகைப்படம் எடுக்கவும் பேட்டி எடுக்கவும் பயங்கர தள்ளுமுள்ளு. அடுத்த நாள் செய்தி தாள்களில் எல்லாம் கொட்டை எழுத்துக்களில் இவரது பிரச்சினையைதான் அலசியிருந்தார்கள்.
இதனால் மிகவும் மனவேதனையில் உள்ளாராம் கருணாஸ். நஸ்ரியாவின் தொப்புளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஊடகங்கள் என்னுடைய வீட்டிற்கு கொடுக்க மாட்டேங்கிறாங்களே என்று புலம்புகின்றார்.