வவுனியாவில் வாள்வெட்டு : குடும்பஸ்தர் வைத்தியசாலையில்!!

278

வவுனியா காளிகோவில் வீதியில் நேற்று (21.08.2017) இரவு 11 மணியளவில் இனந்தெரியதாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத்தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா குருமன்காட்டு வீதியில் வசித்துவரும் குறித்த குடும்பஸ்தரின் வீட்டிக்குள் நேற்று இரவு இனந்தெரியதாக நபர்கள் புகுந்து குறித்த நபர் மீது சரமாரியாக வாள்வெட்டுத்தாக்குதல் மேற்கொண்டதுடன் அங்கிருந்த மோட்டார் சைக்கிலையும் சேதமாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச் சம்பவத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.