வவுனியாவில் தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட 10 வயதுச் சிறுவன் பொலிசாரால் கைது!!

601

வவுனியாவில் தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட 10வயது சிறுவன் உட்பட மூன்று இளைஞர்கள் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்மே லும் இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

வவுனியா வேப்பங்குளம் பட்டக்காடு நெளுக்குளம் போன்ற பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக கருதப்படும் பட்டக்காடு பகுதியைச் சேர்ந்த பத்து வயது சிறுவன் மற்றும் அவரது 18 வயது சகோதரன் மற்றும் வவுனியா நெளுக்குளம் குகன் நகர் பகுதியைச் சேர்ந்த இருபது வயதான இளைஞன் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இவர்கள் யாரும் இல்லாத வீடுகளில் இச்சிறுவனின் உதவியுடன் வீடுகளில் காணப்படும் சிறிய துளைகள் ஊடாக சிறுவனை வீட்டினுள்புகுத்தி கொள்ளைகளில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றை கைப்பற்றியுள்ளதாகவும் அத்துடன் 5 இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பணமும் இவர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதற்காகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளின் பின்னர் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப் படுத்தவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.