5000 ஆண்டு வரை திகதியைச் சொன்னால் கிழமையைச் சொல்லும் சிறுவன்!!

1183

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முகம்மது பஹீம் 13 துபாயில் 7 ஆம் வகுப்பு படிக்கிறார். அபார ஞாபக சக்தி கொண்டவரான முகம்மதுபஹீமை அவரது பெற்றோர் 4 வயது முதல் ஊக்கப்படுத்தினர்.

இந்த நிலையில், தற்போது ஒன்று முதல் 5000 ஆண்டு வரை, எந்தத் திகதியை கூறினாலும் அதன் கிழமையை கூறுகிறார்.
இதேபோல் உலக நாடுகளின் கடிகார நேரத்தையும் கூறுகிறார். எந்த நாட்டை கேட்டாலும், அதன் தலைநகர், கொடி, மொழி, நாணயத்தை கூறுவார். சர்வதேச எண் முறை, அனைத்து அலைபேசி நிறுவனங்களின் பெயர், மொடல், தயாரிப்பு திகதி, மென்பொருள் குறித்தும் கூறுகிறார்.

எங்கெல்லாம் சென்றாரோ அந்த இடத்தின் பெயர், திகதி , நேரத்தை ஞாபகத்தில் வைத்து உள்ளார். இவருக்கு, சிறந்த ஞாபக சக்தியாளர் என்ற முறையில், 5000 ஆண்டுகளுக்கான திகதியைச் சொன்னால் கிழமையை சொல்லும் திறனுக்காக இந்திய சாதனையாளர் புத்தகத்தில் இடம் கிடைத்துள்ளது.