நான் ஜெயலலிதாவின் மகள் : இளம் பெண்ணால் பரபரப்பு!!

1103

ஜெயலலிதாவின் மகள் என்று கூறிக்கொண்டு சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு வந்த இளம்பெண்ணால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகைக்கு நேற்று காலை, 10 மணியளவில் இளம்பெண் ஒருவர் இரண்டு நபர்களுடன் சென்றிருந்தார்.

மாநகர சுகாதார அதிகாரி செந்தில்நாதனை சந்தித்து, நான், முன்னாள் முதல்வர் ஜெ.,யின் மகள். என் தந்தை சோபன் பாபு, தாய் ஜெயலலிதா, பாட்டி சந்தியா ஆகியோரின் இறப்பு சான்றிதழ் வேண்டும்.

ஒன்லைனில் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என கூறியுள்ளார். இதனை கேட்ட செந்தில்நாதன், அனைத்து இறப்பு சான்றிதழ்களையும் ஒன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அனுப்பி வைத்துள்ளார்.

ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழை யாரும் பதிவிறக்கம் செய்ய முடியாதபடி, மாநகராட்சி அதிகாரிகள் Lock செய்திருந்தனர். இந்த சம்பவத்தையடுத்து Un Lock செய்யப்பட்டது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.