வவுனியாவில் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு சொந்தமான காணியை கையகப்படுத்தியுள்ள பொலிசார்!!

859

 
கனகராயன்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு சொந்தமான பொதுக்காணியை பொலிசார் கையகப்படுத்தி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு ஒரே ஒரு காணியே உள்ளது. குறித்த காணி யுத்தம் முடிவடைந்த பின்னர் பொலிசாரால் கையகப்படுத்தப்பட்டு அப்பகுதியில் பொலிஸ் நிலையம் இயங்கி வந்தது.

தற்போது பொலிஸ் நிலையத்திற்கு என காணி வழங்கப்பட்டு அது வேறு ஓர் இடத்தில் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. அப் பொலிஸ் நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட காணி போதிய இடவசதி கொண்டதாகவும் காணப்படுகின்றது.

இந்நிலையில், கனகராயன்குளம் சந்தியை அண்மித்து காணப்படும் கிராமிய அபிவிருத்திச் சங்கத்திற்குரிய காணியை விடுவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து வவுனியா வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் குறித்த விடயம் தொடர்பில் பேசப்பட்டு அந்தக் காணியை விடுவிப்பதாக பொலிசார் உறுதியளித்தனர்.

இருப்பினும் பொலிசார் அதனை விடுவிக்காது தற்போது அந்தக் காணிக்குரிய வேலிகளை பலப்படுத்தி வருவதுடன் அக் காணியை தமது விளையாட்டு திடலாகவும், பொலிஸ் அதிகாரி தங்கிடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே குறித்த காணியை வவிடுவித்து அப்பகுதியின் அபிவிருத்தி நடவடிக்கைக்கு பொலிசார் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா,