ஓதுக்கி வைத்த மக்கள் : காட்டில் குழந்தை பெற்ற கர்ப்பிணிப் பெண்!!

924

ஒடிசா மாநிலத்தில் கிராம மக்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட பெண் காட்டில் குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் மல்கன்கிரி என்ற கிராமத்தை சேர்ந்த திரிலோச்சன் என்பவரது குடும்பத்தை ஒரு சில காரணங்களுக்காக கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்தனர்.

இந்நிலையில், கர்ப்பிணியான திரிலோச்சனின் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது, ஆனால் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த காரணத்தால் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை.
இதனைத் தொடர்ந்து அவசரஊர்தி வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் காட்டுப்பகுதியில் வைத்து அப்பெண்ணிற்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. அம்புலன்ஸை ஓட்டி வந்த ஓட்டுனர் மற்றும் பெண்ணின் கணவர் இருவரும் பிரசவம் பார்த்துள்ளனர்.