மகனின் கண்ணெதிரே அடித்துக் கொல்லப்பட்ட தாய் : பதற வைக்கும் சம்பவம்!!

538

சிறுவனின் கண்ணெதிரே அவனது தாயார் அடித்துகொலை செய்யப்பட்ட சம்பவம் வட இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மனித நேயத்தையே பதற வைக்கும் இச்சம்பவம் இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

அம்மாநிலத்தில் உள்ள சாகிப்கஞ்ச் மாவட்டத்தில் உள்ளது ராதாநகர் என்ற இடத்தில் 9வயது சிறுவன் உள்ளிட்ட நான்குபேர் பிச்சை எடுத்துவந்துள்ளனர்.

அதே நேரம், அந்த மாவட்டத்தின் பல பகுதிகளில் பெண்களின் தலைமுடியை மர்ம நபர்கள் மிகவும் மர்மமான முறையில் வெட்டி எடுக்கப்படுவதாக தகவல்கள் பரவியிருந்தது.

இந்நிலையில், குறித்த சிறுவன் உள்ளிட்ட இந்த பிச்சைக்காரக் குழுவினர் வைத்திருந்த பையில் தலைமுடி இருந்ததாக தெரியவந்தது. கத்தரிக்கோல் உள்ளிட்ட மர்மமான பொருட்களும் அப்பெண் வைத்திருந்த பையில் இருந்ததாகச் சொல்லப்பட்டது.

பெண்களின் தலைமுடியை வெட்டிவந்த அந்த மர்மக் குழு இவர்கள் தான் என்று சந்தேகமுற்ற அப்பகுதி மக்கள் இக் குழுவினரை மோசமாகத் தாக்க தொடங்கினர். அவர்கள்மீது பொல்லுகளாலும் கற்களாலும் கொலைவெறித்தனத்துடன் தாக்கிக்கொண்டே இருந்தார்கள்.

ஆனாலும் தாங்கள் பிச்சைக்காரர்கள் என்றும் தங்களுக்கு ஏதும் தெரியாது என்றும் அக்குழுவிலிருந்த இருந்த பெண்கள் கதறினர். ஆனால் அதனைக் காதுகொடுத்துக் கேளாமல் ஆத்திரத்தில் இருந்த இளைஞர்கள் பெண் ஒருவரின் தலையை கல்லால் எறிந்து சிதைத்தனர்.

இதனால் 45வயது மதிக்கத்தக்க அப்பெண் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

அவரது 9வயது மகனுக்கும் கடுமையான காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர்களுடன் சேர்ந்துவந்த மற்ற இரு பெண்களும் தப்பித்து ஓடிவிட்டனர்.

சிருவனின் முன்னே அவனது தாயை மோசமாகக் கொலை செய்த சம்பவம் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.