விலங்கு போன்று 5 வருடங்களாக மரத்தில் கட்டிவைக்கப்பட்ட சிறுவர்கள்!!

667

 
மனநலம் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களை அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கடந்த 5 வருடங்களாக மரத்தில் விலங்குகளை போன்று கட்டி வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இரு வெவ்வேறு கிராமங்களில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

உதய்பூர் நகரில் உள்ள Baydi என்ற கிராமத்தை சேர்ந்த ஜீவா ராம்(11) என்ற சிறுவன் போலியோ மற்றும் மனநல குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளான்.

இவனை சரியாக கவனிக்க முடியாத காரணத்தால் இவரது தந்தை ஹர்மா ராம் பணிக்கு செல்லும் போது, வீட்டின் வெளியில் ஒரு மரத்தில் தனது மகனை கட்டி வைத்துவிட்டு சென்றுவிடுவார்.

மனநல குறைபாட்டோடு இருப்பதால் வெளியில் விட்டால் ஏதேனும் பிரச்சனைகள் வந்துவிடுமோ என்ற காரணத்தினால் தான் வெளியில் விடுவதில்லை என்று ஹர்மா கூறியுள்ளார்.
இதேபோன்று Kolyari கிராமத்தை சேர்ந்த உமேஷ்(8) என்ற சிறுவனின் பெற்றோர் எச்ஐவி பாதிப்பால் இறந்துவிட்டனர். இதனால் உமேஷை அவரது பாட்டி பீபி பாய்(75) வளர்த்து வருகிறார்.

மூன்று வயது வரை நன்றாக இருந்த உமேஷ், தங்களது பெற்றோர்களின் மரணத்திற்கு பின்னர் புத்தி பேதலித்தது போன்று ஆகிவிட்டான், இவனை பராமரிப்பது எனக்கு மிகவும் சிரமமாக உள்ளது, அவனை வெளியில் விட்டால் அங்கும் இங்கும் ஓடுகிறான், அவனது பின்னால் ஓட இயலவில்லை, மேலும் அவனை வெளியில் விட்டால் மற்றவர்களோடு சண்டையிட்டு பிரச்சனையை ஏற்படுத்துகிறான் என்பதால் இவ்வாறு மரத்தில் கட்டிவைத்துள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும், அவனுக்கு சிகிச்சை செய்வதற்கு ஏற்ற பணமும் எங்களிடம் இல்லை என்பதால் நாங்கள் அப்படியே விட்டுவிட்டோம் என தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு சிறுவர்களை விலங்கினங்கள் போன்று இப்படி மரத்தில் கட்டி வைத்து கொடுமைப்படுத்தியது மனிதாபிமானமற்ற முறை என்று கூறியு தன்னார்வ தொண்டு அமைப்பு, இவர்கள் இருவரையும் மீட்டு தங்கள் பாதுகாப்பில் எடுத்துக்கொண்டனர்.