வவுனியா குருமன்காட்டில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு : அறுவர் கைது!!

821

வவுனியா காளிகோவில் வீதியில் கடந்த 21.08.2017 இரவு 11 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத்தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் வவுனியாவை சேர்ந்த 20 தொடக்கம் 28வயதுடைய இளைஞர்கள் ஆறு பேரை நேற்று (24.08.2017) இரவு கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இச் சந்தேக நபர்கள் மீது பல முறைப்பாடுகள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் காணப்படுவதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.