7 வயது மகளை இருமுறை மாடியிலிருந்து தூக்கி வீசிய தாய்!!

582

மகளை மொட்டை மாடியிலிருந்து இரண்டு முறை தூக்கி வீசி கொலை செய்த தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரை சேர்ந்தவர் காஞ்சன், இவர் மனைவி சுவாதி, இவர்களுக்கு ஐசிகா சர்க்கார் என்ற 7 வயது மகள் உள்ளார்.

சுவாதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காஞ்சன் அவரை பிரிந்து சில மாதங்களாக தனியாக வாழ்ந்து வருகிறார், மாதம் ஒருமுறை மனைவியை சந்தித்து செலவுக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மதியம் ஐசிகாவை வீட்டு மொட்டை மாடிக்கு அழைத்து சென்ற சுவாதி அங்கிருந்து அவரை தூக்கி கீழே வீசியுள்ளார்.

பின்னர் கீழே வந்து ஐசிகா இன்னும் உயிருடன் இருப்பதை பார்த்து கோபமடைந்த சுவாதி, மீண்டும் அவரை மாடிக்கு தூக்கி சென்று அங்கிருந்து கீழே வீசியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஐசிகா துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தை பார்த்த அயலவர்கள்தெரிவிக்கையில், ஐசிகாவின் சத்தம் கேட்டு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தோம். சுவாதி உடையில் ரத்த கறை இருந்த நிலையில், மீண்டும் ஐசிகாவை மாடியிலிருந்து தூக்கி கீழே வீசினார்.

இதையடுத்து சுவாதியை பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து பின்னர் பொலிசாருக்கு தகவல் கொடுத்தோம்.

கணவரை விட்டு பிரிந்ததிலிருந்தே சுவாதியின் மனநிலையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் ஐசிகாவின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு, சுவாதியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.