வவுனியா புளியங்குளத்தில் உண்ணாவிரதப் போராட்டம் : ஜனாதிபதியை சந்திக்க கோரிக்கை!!

708

 
உறவினர்களுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை தீர்ப்புக்கு எதிராக ஜனாதிபதியை சந்திக்க அனுமதி வழங்கவேண்டும் என தெரிவித்து நேற்று (28.08.2017) காலை 11.00 மணிக்கு குறித்த மரணதண்டனை கைதிகளின் குடும்பத்தினர் வவுனியா புளியங்குளத்தில் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

2006 ஆம் ஆண்டு வவுனியா சுந்தரபுரத்தில் கத்தியால் குத்தி இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு மகன்களுக்கே வவுனியா மேல் நீதிமன்றம் 01.06.2017 அன்று மரண தண்டணை தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இத்தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்துள்ளபோதும் தங்களுக்கு சரியான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கும் மரணதண்டனை கைதிகளின் உறவுகள் ஜனாதிபதியை சந்திக்க அனுமதி பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்து அடையாள உண்ணாவிரதத்தில் மேற்கொண்டனர்.

குறித்த அடையாள உண்ணாவிரத போராட்டம் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானதாக இருப்பதால் உண்ணாவிரதத்தில் ஈடுபடுபவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என உண்ணாவிரதத்தில் இருந்தவர்களுக்கு புளியங்குளம் பொலிசாரால் தகவல் வழங்கப்பட்டதையடுத்து உண்ணாவிரதமிருந்தவர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுச் சென்றனர்.