வவுனியா சமளங்குளம் யுரேனஸ் இளைஞர் கழகம் நடாத்திய கலை விருது விழா சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலய முன்றலில் இளைஞர் கழகத்தின் தலைவர் கணேசலிங்கம் சிம்சுபன் தலைமையில் நடைபெற்றது. இன் நிகழ்வு தொடர்பாக கழகத்தின் தலைவர் கருத்து தெரிவிக்கையில்,
“இது கலைஞர்களுக்கான களம் இதன் கதவை நாங்கள் திறந்து விட்டிருக்கின்றோம் அதனை நீங்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள் இது வெறுமனவே வாய்பேச்சு அல்ல கலைஞர்களின் உள்ளத்தில் உள்ளவை புரிந்து கொள்ளுங்கள் என்றார்”
இன் நிகழ்வு 20 வருடங்களின் பின்னர் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் நிகழ்ச்சியின் பங்கு பற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்காக இரவு பகலாக பாடுபட்ட இளைஞர் கழக உறுப்பினர்களான பிரேம்குமார், நிரோஷன், தனுஷன், கஜன், கிருசாந், திலக்சன் ஆகியோருக்கு அக்கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.