வவுனியா பொது வைத்தியசாலையில் ஆளணிப்பற்றாக்குறை : வைத்தியசாலைப் பணிப்பாளர்!!

303

வவுனியா பொது வைத்தியசாலைக்கு நோயாளர்கள் வரும்போது அவர்களை தள்ளுவண்டில்களில் அழைத்துச் செல்வதில் ஆளணிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ள காரணத்தினாலே நோயாளருடன் வரும் உறவினரை உதவிக்கு அழைக்க நேரிட்டுள்ளது. இதை தவறாக நினைக்கவேண்டாம்.

இதேபோல இரத்தப்பரிசோதனைகள் மேற்கொள்ளும்போது சில நேரங்களில் இரத்தம் உறைந்துவிடுவதன் காரணமாக பரிசோதனை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுகின்றது. இதன் காரணமாகவே திரும்ப இரத்த பரிசோதனை மேற்கொள்வதற்கு இரத்த மாதிரி பெறப்படுகின்றது. அவர்களின் பரிசோதனைகளை சரியான முறையில் மேற்கொள்ளவேண்டும் என்ற காரணத்தினாலே திரும்ப இரத்தப்பரிசோதனை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இவ்வாறு வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கு. அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் சில குறைபாடுகள் காணப்படுவதாக பொது மக்கள் தெரிவித்ததையடுத்து வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.