வவுனியா மாவட்டத்தில் 40 பரீட்சை மத்திய நிலையங்களில் 4309 மாணவர்கள் சாதாரண தர பரீட்சைக்கு!!

523

நாடளாவிய ரீதியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை இன்று (06.05.2024) இடம்பெற்று வருகின்ற நிலையில் வவுனியா மாவட்டத்தில் மாணவர்கள் பரீட்சை நிலையங்களிற்கு ஆர்வத்துடன் செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

நாடளாவிய ரீதியில் கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சையில் 452,979 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன் நாடளாவிய ரீதியில் 3,527 நிலையங்களில் பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் பரீட்சையின் பாதுகாப்புக்காக 2000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில் 40 பரீட்சை நிலையங்கள் மற்றும் 14 இணைப்பு நிலையங்களில் 4309 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.