வவுனியா A9 வீதியில் வாகன விபத்து ஒருவர் பலி : மூவர் படுகாயம்!!

323

 
வவுனியா கல்குண்ணாமடுவ பகுதியில் இன்று (30.08.2017) அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

அனுராதபுரத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த ஒடுகளை ஏற்றி வந்த வாகனம் கல்குண்ணாமடுவ பகுதியில் எவ்வித சமிச்சை விளக்குகளுமின்றி தரித்து நின்றது. அதே பாதையில் வவுனியா நோக்கி பயணித்த வீட்டின் மேல் கூரை அலங்கரிப்பு பொருட்களை ஏற்றி வந்த வாகனம் தரிந்து நின்ற வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் தரிந்து நின்ற வாகனம் வீதியின் கீழ் தூக்கியெறியப்பட்டு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் தரித்து நின்ற வாகனத்தில் பயணித்த வன்னிமுத்து கிஸ்ணன் (வயது – 48) என்பவர் உயிரிழந்ததுடன் மூவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் முன்னேடுத்து வருகின்றனர்.