ஆயுதப் போராட்டத்தை யாரும் கொச்சைப்படுத்த முடியாது!- தயா மாஸ்டர்..!

940

dayaதமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் ஆயுதப் போராட்டம் தவிர்க்க முடியாததொன்று, அதனை எவரும் கொச்சைப்படுத்த முடியாது என விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் நேற்று சனிக்கிழமை காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ மற்றும் புளொட் ஆகியவற்றின் உறுப்பினர்கள் கலந்துகொண்ட ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றது.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டின் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியினர், ஆயுதக்குழுக்களை தமிழரசுக்கட்சி கொச்சைப்படுத்தி வருகின்றது என்று தெரிவித்தனர்.

இதன்போது குறுக்கிட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர், தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் ஆயுதப் போராட்டம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அதனை யாரும் கொச்சைப்படுத்த முடியாது என்று அங்கத்துவக் கட்சி உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.