வவுனியாவில் தனிநாயகம் அடிகளாரின் 37வது நினைவு தினம் அனுஸ்டிப்பு!!

818

 
தமிழ் வளர்ச்சிக்காக உழைத்த தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் 37வது நினைவு தினம் வவுனியாவில் நேற்று(01.09.2017) காலை 8.30 மணியளவில் அனுஸ்டிக்கப்பட்டது.

வரியிறுப்பாளர் சங்கத் தலைவரும் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் தலைவருமான செ.சந்திரகுமார் தலைமையில் வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் உள்ள அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

பொது அமைப்புக்களோ, சமூக அமைப்புக்களோ, அரசியல்வாதிகளோ இச் சிலைகளை கண்டுகொள்ளாத இந் நிலையில் தனியொரு மனிதனாய் தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் 37 வது நினைவு தினம் அனுஸ்டித்தமை குறிப்பிடத்தக்கது.