யாழில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து: ஒருவர் பலி..!

725

ACCIDENT_logoயாழ்ப்பாணம் விபுலானந்த சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றையதினம் மாலை யாழ். நகரை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று அதே திசையில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த 59 வயதான நபரொருவர் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபுலானந்த வீதியைச் சேர்ந்த ஜே.பத்மநாதன் என்பவரே விபத்தில் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த மற்றையநபர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.