இந்திய மீனவர் சுட்டுக்கொலை, 30 பேர் கடத்தல்: பாகிஸ்தான் அட்டூழியம்..!

552

pakஇந்தியாவின் குஜராத் மாநிலத்தை ஒட்டியுள்ள ஜகாவ் சர்வதேச கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர் ஒருவரை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் கடலோர காவல்படையினர் 5 படகுகளுடன் 30 மீனவர்களையும் கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடுக்கடலில் இந்திய மீனவர்களின் படகுகளை வழிமறித்து பாகிஸ்தான் கடலோர காவல் படையினர் கண்மூடித் தனமாக இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிகளால் சுட்டதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இதில் நரன் சோசா என்ற மீனவர் உயிரிழந்தார். மேலும் துப்பாக்கி முனையில் மீனவர்களின் 5 படகுகளையும் பறித்துக்கொண்டு அதிலிருந்த 30 மீனவர்களையும் அவர்கள் கடத்தி சென்றதாக தப்பி வந்த ஒரு மீனவர் போர்பந்தர் மீனவர் சங்கத்திலும், பொலிஸ் நிலையத்திலும் புகார் அளித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக இந்திய மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோனியிடம் பேசிய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, மத்திய அரசு விரைவாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.