வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் சிரமதானப் பணியில் பங்கேற்குமாறு அழைப்பு!!

1448

வவுனியா – தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆரம்பப்பிரிவில் சிரமதானப் பணிகள் நாளை (16.09.2017) இடம்பெறவுள்ளன.

குறித்த வேலைத்திட்டம் சனிக்கிழமை (16.09.2017) காலை 8.30 மணியிலிருந்து 11.00 மணி வரையும் நடைபெறவுள்ளது.

அத்துடன் சிரமதானப் பணியில் இணைந்து கொள்வதற்கும், மாணவர்கள் நடமாடும் பகுதிகளில் புற்கள், பாத்தீனியச் செடிகள் குடிகொண்டுள்ளதால் அதனை அகற்றி மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கும் ஒத்துழைப்பினை வழங்குமாறும் பாடசாலை அதிபர் த.அமிர்தலிங்கம் கோரியுள்ளார்.

சிரமதான வேலைக்குரிய உபகரணங்களான கத்தி, மண்வெட்டி, புல்லுவெட்டி, போன்ற உபகரணங்களுடன் சமூகமளிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் இந்த சிரமதானப் பணியில் பெற்றோர்கள், பழையமாணவர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பாடசாலை அதிபர் த.அமிர்தலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.