நெடுங்கேணி – புளியங்குளம் வீதியில் அடிக்கடி யானைகள் வீதிக்கு வருவதால் அவ் வீதி வழியாக பயணிக்கும் மக்களை பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை 4.30 மணிமுதல் மாலை 5.20 வரை அப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டதாக அவ் வீதி வழியாக பயணித்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அச்சத்துடனேயே பலரும் பயணங்களை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளதுடன் தற்போது மாலை வேளைகளில் அப்பகுதியில் அடிக்கடி யானைகள் வந்து செல்வதாகவும் இதனால் தாம் அச்சத்துடனேயே அவ் வீதியில் பயணிப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.












