வவுனியாவில் பேருந்தில் பெண்ணிடம் சேட்டை : இராணுவ சிப்பாய் கைது!!

601

வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் பரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (17.09.2017) பிற்பகல் 2.30 மணியளவில் வவுனியா நோக்கி பயணித்த பேருந்தில் மாணவியிடம் சேட்டை புரிந்த இராணுவச்சிப்பாய் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

குருநாகல் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்தில் விடுமுறையில் வீடு சென்ற கலாபோகஸ்வவே இராணுவ முகாமில் பணிபுரியும் இராணுவ சிப்பாய் ஒருவர் பேருந்தில் பயணித்த கொண்டிருந்த போது அதே பேருந்தில் அவருக்கு அருகில் அமர்ந்து பயணம் மேற்கொண்ட தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த மாணவி மீது இராணுவச்சிப்பாய் திடிரேன சேட்டை புரிந்துள்ளார்

மாணவி போட்ட கூச்சல் சத்தத்தையடுத்து குறித்த இராணுவச்சிப்பாயை பேருந்தில் பயணம் மேற்கொண்டவர்களின் உதவியுடன் ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இவரை மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்