வவுனியா, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் இன்று மின் விநியோகத் தடை!!

612

வடமாகாணத்தின் கிளிநொச்சி, மன்னார், வவுனியா மாவட்டங்களின் சில இடங்களில் இன்று மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

மின்சார பராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகளுக்காக மின்சாரம் தடை செய்யப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை கிளிநொச்சியின் கரிக்கட்டுக் குளத்திலும், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மன்னார் மாவட்டத்தின் மடுக்கரைப் பிரதேசத்திலும், காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை வவுனியாவின் தவசிக்குளம், யங்கன்குளம் ஆகிய இடங்களிலும் மின்சாரம் தடைப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.