வவுனியா சிவபுரம் பகுதியில் நேற்று (21.09.2017) காலை 9 மணியளவில் கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் திரு.குணபாலன் தலைமையில் பொது நூல் நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வவுனியா பிரதேச செயலாளர் திரு. கா.உதயராஜா, வவுனியா தெற்கு வலய கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு எம்.பி.நடராசா , முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், செக்கட்டிப்புலவு கிராம சேவையாளர் ஜே.அமலதாஸ், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாக கே.கே.மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், ஆகியோரின் இணைப்பாளர்கள், அமைச்சர் ரிஷாட் பதியூதினின் இணைப்பாளர், சமுர்த்தி உத்தியோகத்தர், பாடசாலை அதிபர், மாணவர்கள், ஆசிரியர்கள், மகளிர் அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் வரவேற்பு நடனம், கவிதை வாசித்தல் , மாணவர்களுக்கு வாசிப்பு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன
பொது நூலகத்தின் ஞாபகார்த்த மரக்கன்று ஒன்றினையும் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் நாட்டி வைத்தனர்.





















