150 கிலோ எடையை குறைக்க முயற்சி செய்த பெண் மரணம்!!

624

 
திருவண்ணாமலை மாவட்டத்தில் உடல் எடை குறைப்பதற்கா அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் உயிரிழந்துள்ளார்.

வளர்மதி(46) என்பவர் 150 கிலோ எடையை குறைக்க ஆகஸ்ட் 23ம் திகதி கீழ்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் வளர்மதிக்கு 8 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நடந்த 9வது அறுவை சிகிச்சைக்கு பின் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வளர்மதி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தனது மனைவி உயிரிழந்துவிட்டார் என அவரது கணவர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், வளர்மதியின் கணவர் அழகேசன் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.