இப்படியும் ஒரு குடும்பமா? அப்படியென்ன ஆச்சரியம் நிகழ்த்தினார்கள்?

541

 
குப்பை மேடாக காட்சியளித்த காட்டு வழிப்பாதையை ஒரு குடும்பமே சேர்ந்து சுத்தம் செய்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் மெல்லின்கொப்பா கிராமத்தை சேர்ந்தவர் ரஷ்மி ராவ் (37) இவர் தனது குடும்பத்தாருடன் ஷிவ்மோகா நகருக்கு காரில் செல்லும் போது ஒரு காட்டு வழி பாதையை கடக்க வேண்டும்.

அந்த பாதையானது அதிகளவில் குப்பைகள் மற்று காலி மது பாட்டில்கள் கொட்டப்பட்டு அசுத்தமாக காட்டியளித்துள்ளது. இதை பலமுறை பார்த்த ரஷ்மி, அரசு ஏன் இதை சுத்தம் செய்யவில்லை என தனது கணவரிடம் கேள்வியெழுப்பினார்.

பின்னர் கடந்த வாரம் தனது குடும்பத்தாருடன் சேர்ந்து அந்த பகுதியை சுத்தம் செய்ய முடிவெடுத்த ரஷ்மி அதற்கான செயலிலும் இறங்கினார்.

அதன்படி ரஷ்மி, அவர் கணவர் மற்றும் குழந்தைகள் இதை செய்ய முடிவெடுத்தனர். அவர்களுடன் மைத்துனர் மற்றும் அவர்களின் குழந்தைகளும் வந்தார்கள். எல்லோரும் கையுறை அணிந்து கொண்டு குறித்த பகுதியில் மலையளவு சேர்ந்திருந்த குப்பைகள் மற்றும் பாட்டிகளை சில மணி நேரத்தில் அப்புறப்படுத்தி பிளாஸ்டிக் டிரம்மில் அடைத்தனர்.

150-200 கண்ணாடி பாட்டில்களை அவர்கள் சேகரித்தனர். தற்போது குப்பை மேடாக இருந்த இடம் சுத்தமாக காட்சியளிக்கிறது. இது குறித்து ரஷ்மி கூறுகையில், சுற்றுலா வரும் பயணிகள் ஆங்காங்கே குப்பைகள் மற்றும் பாட்டில்களை போட்டு விட்டு சென்றுவிடுகின்றனர். பல பாட்டில்கள் உடைந்துவிடுவதால் அது இங்குள்ள மிருகங்களுக்கும், இவ்வழியே செல்லும் மனிதர்களுக்கும் ஆபத்தை விளைக்கிறது என கூறியுள்ளார்.

குடும்பத்துடன் தான் செய்த செயலை ரஷ்மி பேஸ்புக்கில் பதிவிட்டதுடன், இது போன்ற அசுத்தமான பகுதிகளை சுத்தம் செய்ய மக்கள் தங்களுடன் இணைய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.