உத்திரப்பிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்ட 5ஆம் வகுப்பு மாணவனின் உருக்கமான கடிதம் சிக்கியது.
உத்திரப்பிரதேசத்தின் கோரக்பூா் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கும் நவநீத் இரண்டு தினங்களுக்கு முன்னர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நவநீத் சாரியாக படிக்காத காரணத்தால் வகுப்பு ஆசிரியை மாணவனுக்கு தண்டனை அளித்ததால், மாணவன் இந்த முடிவை எடுத்துக் கொண்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் மாணவனின் புத்தக பையில் கடிதம் ஒன்று இருந்ததைக் கண்ட அவரது தந்தை, கடிதத்தில் இருப்பதை படித்துள்ளார்.
அதில் நவநீத், அப்பா இன்று என்னுடைய முதல் தோ்வு, ஆனால் எனது வகுப்பு ஆசரியை என்னை தொடா்ந்து மூன்று வகுப்புகளுக்கு நிற்க வைத்து தண்டனை அளித்ததால், நான்அழுது கொண்டே நின்றிருந்தேன்.
ஆனால் ஆசிரியர் தன்னை பொருட்படுத்தாமல் தொடா்ந்து பாடம் எடுப்பதிலேயே கவனம் செலுத்தியதால், நான் என் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் எனவும் இது போன்ற தண்டனையை யாருக்கும் அளிக்க வேண்டாம் என்று எனது ஆசிரியை கேட்டுக் கொள்கிறேன் என்று உருக்கமாக கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து கடிதத்தின் அடிப்படையில், அவரது தந்தை அங்கிருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளித்ததால், இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






