கடந்த 2010ம் ஆண்டு மீள்குடியேற்றத்திற்கு பின்னர் பல மில்லியன் ரூபா செலவில் போக்குவரத்து வசதிகளும், தங்குமிட வசதிகளும், 15க்கு மேற்பட்ட கடைத் தொகுதிகளுடன் அமைக்கப்பட்ட நெடுங்கேணி பேரூந்து நிலையம் அழிவடைந்து செல்லும் நிலையில் காணப்படுகின்றது.
இக் கட்டிடத்தொகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களை வர்த்தகர்கள் பல லட்சம் முதலீடு செய்து நடத்திச் செல்கின்ற போழுதும் குறித்த பேரூந்து தரிப்பிடத்திற்கு இ.போ.ச , தனியார் பேரூந்துகள் செல்வதில்லை இதனால் வர்த்தகர்கள் பொருளாதார ரீதியில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
நெடுங்கேணி பிரதேச செயலக அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இவ் பேரூந்து நிலையம் தொடர்பாக பொதுமக்கள் கதைக்கின்ற போது மக்கள் பிரதிநிதிகளும் அரச உத்தியோகத்தர்களும் சேர்ந்து பல்வேறு தீர்மானங்களை மேற்கொள்ளுகின்ற போதும் எவ்வித பயனுமின்றி காணப்படுகின்றது
குறித்த பேரூந்து நிலையத்திற்கு இ.போ.ச பேரூந்து, தனியார் பேரூந்துகள் தரித்து பிரயாணிகளை ஏற்றிச்செல்வதன் மூலம் பேரூந்து நிலையம் பாவணையில் இருக்கும் என்பதுடன் வர்த்தர்களும் பொருளாதார ரீதியில் பாதிப்படையமாட்டார்கள்.
மக்களின் வரிப்பணத்தில் கட்டப்படும் அரச சொத்துக்கள் பாவணையற்று காணப்படுகின்றது கவலைக்குறிய விடயம் எனவே நெடுங்கேணி பிரதேச செயலாளரே இது உங்களின் கவனத்திற்கு.
வவுனியா A9 வீதியில் 195மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட மத்திய பேரூந்து நிலையமும் இவ்வாறான நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
















