வவுனியா புகையிரத நிலையத்தில் பொதுமக்கள் முற்றுகை : பொலிஸார் குவிப்பு!!

502

 
வவுனியா புகையிரத நிலையத்தினை இன்று (23.09.2017) மாலை 5.45 மணியளவில் பொதுமக்கள் முற்றுகையிட்டமையினால் பொலிஸார் குவிக்கப்பட்டனர். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கொழும்பு புறக்கோட்டையிலிருந்து காலை 5.45 மணிக்கு காங்கேசன்துறை நோக்கி புறப்பட்ட புகையிரதம் பொல்காவலை பகுதியில் தடம்புரண்டதால் சுமார் இரண்டு மணிநேரம் கழித்து மீண்டும் பொல்காவலை பகுதியிலிருந்து பயணிகளை இ.போ.ச பேரூந்து மூலம் வேறோறு புகையிரத நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட புகையிரம் மாலை 5.45 மணியளவில் வவுனியா புகையிரத நிலையத்தினை வந்தடைந்தது .

வவுனியா புகையிரத நிர்வாகி இதற்கு மேல் புகையிரதம் காங்கேசன்துறை நோக்கி பயணிக்காது என தெரிவித்தார். இதனால் ஆத்தரமடைந்த பயணிகள் புகையிரத நிலையத்தினை முற்றுகையிட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பத் புகையிரத நிர்வாகியிடம் சுமார் 10 நிமிடத்திற்கு மேல் கலந்துரையாடினார்.

இதன் பின்னர் புகையிரத நிலையத்திக்கு பொலிஸார் குவிக்கப்பட்டதுடன் கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த புகையிரதம் மாலை 6.45 மணியளவில் வவுனியா புகையிரத நிலையத்தினை வந்தடைந்தது. அந்த புகையிரத்தில் பயணிகளை ஏற்றி சென்றனர்.

இதனால் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேல் வவுனியா புகையிரத நிலையத்தில் பதற்ற நிலை காணப்பட்டது.