வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் அடையாளம் தெரியாத இளைஞர் குழுக்கள் நேற்று மாலை தொடக்கம் நள்ளிரவு வரை அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் குருமன்காடு, வைரவப்புளியங்குளம் புகையிரத வீதி, பூங்கா வீதி, நகரசபை வீதி, குட்சைட் வீதி, தோனிக்கல் போன்ற பகுதிகளில் அடையாளம் தெரியாத இளைஞர் குழுக்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது வீதியில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்களிடமிருந்து நகைகள், பணம் என்பவற்றை அபகரிக்க முயன்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதனால் காயமடைந்த இருவர் வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் மூன்றுக்கு மேற்பட்ட முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும் இது வரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.






