வவுனியாவில் சத்தியலிங்கம் தலமையில் தமிழரசு கட்சியின் பொதுச்சபை கூட்டம்!!

494

 
வவுனியா தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட பொதுச்சபைக்கூட்டம் குருமன்காடு தாயகம் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (23.09.2017) மாலை 3.30 மணியளவில் வடமாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தலமையில் நடைபெற்றது. இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம்,

கட்சியினுடைய வளர்ச்சி எதிர்கால நடவடிக்கை வவுனியா மாவட்டத்தில் எடுக்க வேண்டிய தேவைகள் தொடர்பாகவும் காணி அபகரிப்பு, முக்கியமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகள் தொடர்பாக எங்களுடைய கட்சிக்கு இருக்கின்ற கரிசனைகளை தலைமைத்துவதற்திற்கு தெரிவித்து இந்தப்பிரச்சினைகள் தொடர்பாகவும் கட்சி என்ற அடிப்படையில் எவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கலாம் என்ற விடயங்கள் தொடர்பாகவும்,

எங்களுடைய சமூகத்தில் இருக்கின்ற முன்னாள் போராளிகள் தொடர்பாகவும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக தமிழரசுக்கட்சியாக எவ்வாறு செயற்படலாம் என்ற விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது என தெரிவித்தார்

இக் கூட்டத்திற்கு வவுனியா தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.