பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாதஸ்வரத்தை அவமதித்ததாக கூறி அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாதஸ்வரத்தை தூக்கியெறிந்து அவமதித்ததாக கூறி, தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் பேரவைத்தலைவர் குகேஷ், சென்னை எலும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகிய இருவரும் அடுத்த மாதம் 6 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.






