வவுனியா மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நவராத்திரி விழா!!

858

 
வவுனியா மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டின் நேற்று ( 25.09.2017) திங்கட்கிழமை காலை 10 மணியளவில் மாவட்ட காரியாலய மண்டபத்தில் நவராத்திரி விழா நடைபெற்றது.

இந் நிகழ்வில் உதவிப் பணிப்பாளர் சுனில் ஜெயமஹே , இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ.கேசவன், வட மாகாண சுகாதார அமைச்சின் இணைப்பாளர் அ.நாகராஜன், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஐ.சுகானி, முன்னாள் மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் தே.அமுதராஜ், கூட்டுறவு உத்தியோகத்தர் அமித் பண்டார, இளைஞர் கழக பிரதேச சம்மேளன பொருளாளர் சிம்சுபன், இளைஞர்கள், யுவதிகள், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பயிற்சி நிலைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.