ராஜ்குமார் என்ற 98 வயது முதியவர் பொருளாதார பிரிவில் முதுநிலை பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (98). இவர் கடந்த 1938ல் பொருளாதார பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை முடித்தார்.
பின்னர் குடும்ப சூழ்நிலை காரணமாக மேற்கொண்டு படிப்பை தொடரமுடியாமல் போனது.
இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு நாலந்தா திறந்த நிலை பல்கலைகழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பில் ராஜ்குமார் சேர்ந்தார்.
தற்போது முதுநிலை பட்டப்படிப்பை தனது 98 வயதில் முடித்துள்ளார்.
இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள ராஜ்குமாரின் வெற்றி அவர் குடும்பத்தாரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ராஜ்குமார் கூறுகையில், முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் கனவு பற்றி குடும்பத்தினரிடம் நான் சொன்னபோது, அவர்கள் என்னை ஊக்கப்படுத்தினார்கள்.
இது ஒரு சவாலாக இருந்த நிலையில், அதை ஏற்றுகொண்டு எனது நீண்டநாள் கனவை நிறைவேற்றியிருக்கிறேன் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.






