மகளை தீவைத்து எரித்த தந்தை : அதிர்ச்சிக் காரணம்!!

1366

ராஜஸ்தானில் திருமணத்திற்கு மறுத்த மகளை அவரது தந்தையே தீயிட்டு எரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பன்ஸ்வாரா மாவட்டத்தை சேர்ந்த ஷீமா(18) என்ற பெண்ணுக்கு அவரது வீட்டில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், தனக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லையென ஷீமா தனது பெற்றோரிடம் தெரிவித்திருந்தார். இருப்பினும் கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைக்க முயற்சித்துள்ளனர்.

ஷீமா விடாப்பிடியாக மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த தந்தை, அவரை தீயிட்டு எரித்துள்ளார், இதில் ஷீமாவின் உடல் முழுவதும் தீயால் கருகியதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள பொலிசார் ஷீமாவின் தந்தையை கைது செய்துள்ளனர்.