மேலாடை இல்லாமல் ஊர்வலமாக சென்ற சிறுமிகள்!!

675

தமிழகத்தில் மதுரை மாவட்டத்தின் மேலூர் அருகே உள்ளே வெள்ளளூர் என்ற கிராமத்தில் ஏழைகாத்தம்மன் கோவில் திருவிழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்த கோவில் திருவிழாவின் போது 15 வயதுள்ள சிறுமிகள் மேல் சட்டையில்லாமல் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

இது கோவில் திருவிழாவில் நடத்தப்படும் சடங்கு என்று கூறப்படும் நிலையில், இது தொடர்பாக தனியார் செய்தி இணையதளம் ஒன்று வீடியோவை வெளியிட்டிருந்தது.

இது சமூக ஆர்வலர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளர் மெய்யம்மை கூறுகையில், இந்த கோவிலில் நடக்கும் திருவிழாப் பற்றி எனக்குத் தெரியும் என்றும் 15 வயதுடைய சிறுமிகளை, மேல் சட்டையைக் களைந்து ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவார்கள்.

அதன் பின் அந்த சிறுமிகள் ஏழு நாள்களுக்குக் கோவில் பூசாரியுடன் தங்கவைப்படுவார்கள். இது தொடர்பாக கடந்த ஞாயிறு அன்று செய்தி வெளியிட்டேன். அதைத் தொடர்ந்து திங்கட் கிழமை முதல் தனக்கு போன் மற்றும் சமூகவலைத்தளமான பேஸ்புக் மூலம் பாலியல் ரீதியான மிரட்டல்களும் கொலை மிரட்டல்களும் வர ஆரம்பித்ததாக கூறினார்.

சுமார் 50,000 பேர் கூடும் திருவிழாவில், இப்படி மேலாடை இல்லாமல் சிறுமிகள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவது கொடுமையானது. இதை நான் நேரடியாகப் பார்த்தேன்.

அதுமட்டுமின்றி கோவில் திருவிழாவில் இருந்த சிலர் செல்போனில் அந்தச் சிறுமிகளைப் படம்பிடித்தார்கள். இது சிறுமிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை.

சிறுமிகளுக்கு மேலாடை போட்டு, திருவிழா நடத்துங்கள் என்று கலெக்டட் கூறிய போது, அது எங்க வழக்கத்துக்கு மாறானதுனு என்று கூறி மறுத்துவிட்டதால், இதை தான் செய்தியாக்கியதாக கூறினார்.

மேலும் குறித்த செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் வித்யாஸ்ரீ தர்மாராஜ் கூறுகையில், அந்த செய்திக்கு பின்னர் பல அழைப்புகள் வந்து கொண்டே இருந்ததாகவும், இரத்தம் கக்கி சாவே எனவும் உங்க இணையதளத்தையே ஹேக் செஞ்சுடுவோம் என்று மிரட்டியதாகவும் அவர் கூறினார்.

இதையடுத்து இது தொடர்பாக காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளதாகவும், அவர்கள் சரியான நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவதாகவும் கூறினார்.