சென்னையில் வீதியில் விளையாடிய இரண்டரை வயது குழந்தையை கடத்திய சிறுவனை கைது செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த முகமது இலியாஸ் என்பவரின் முகமது சாது, நேற்று முன்தினம் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது அங்கு சைக்கில் வந்த 9 வயது மதிக்கத்தக்க சிறுவன் சைக்கிளில் சாதுவை அழைத்துச் சென்றுள்ளான்.
இதுகுறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட விசாரணை நடத்திய பொலிசார், அப்பகுதி சிசிடிவி கமராவை ஆய்வு செய்ததில் சிறுவன் ஒருவன் ஒரஞ்சு நிற சைக்கிளில் குழந்தையை கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து, கொருக்குப்பேட்டை பகுதியில் சிறுவன் இருப்பதைக் கண்டறிந்த தனிப்படையினர், குழந்தையைப் பத்திரமாக மீட்டனர்.
சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவன் கூலி தொழிலாளியின் மகன் என தெரிந்தது. விளையாடுவதற்காகவே குழந்தையை சிறுவன் கடத்தியதாக பொலிசார் கூறியுள்ளார்.
ஆனால், ஒரஞ்ச் நிறத்திலான சைக்கிள் நிறத்தை கடத்தலுக்கு பின்னர் சிறுவன் மாற்றியுள்ளதால் சந்தேகத்தின் பேரில் அவனை கைது செய்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.
இதையடுத்து, நேற்றிரவு தந்தை இலியாஸிடம் குழந்தை முகமது சாதுவை பொலிசார் ஒப்படைத்தனர்.







