மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை : தந்தை பரபரப்பு புகார்!!

785

தமிழகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் விடுதியின் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், அவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தந்தை புகார் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டின் சிவகங்கையை சேர்ந்தவர் பரணிதாஸ், இவரது மகள் தாரணி (19), திண்டுக்கல் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தவர் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு 2 மணிக்கு விடுதியின் மூன்றாம் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார், படுகாயமடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

பொலிசார் சம்பவம் குறித்து விசாரித்து வந்த நிலையில், தாரணிக்கும், விடுதி வார்டனுக்கும் தகராறு இருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து தாரணியின் தந்தை பரணிதாஸ் கூறுகையில், கடந்த 25ம் திகதி தாரணி மற்றொருவர் செல்போனில் இருந்து என்னிடம் பேசினார்.

அப்போது நன்றாக பேசியவர், இரவு சுமார் 12 மணிக்கு மீண்டும் போன் செய்து, இங்கே ரொம்ப கொடுமை செய்றாங்க. என்னை கூட்டிட்டு போங்க என்று அழுத நிலையில் போன் திடீரென கட்டானது.

பின்னர் குறித்த நம்பருக்கு போன் செய்தால் யாரும் எடுக்கவில்லை. தாரணியின் உடலில் எலும்பு முறிவோ, பலத்த காயமோ இல்லாத நிலையில் அவர் கீழே குதித்து விட்டதாக கூறுவது பொய்.

அவரை யாரோ துன்புறுத்தி உள்ளனர், மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.