மருத்துவமனை கட்ட1307 கோடி நன்கொடை அளித்த இந்திய தம்பதி!!

550

அமெரிக்காவில் மருத்துவமனை கட்டுவதற்காக அந்நாட்டில் வாழும் இந்தியாவை சேர்ந்த தம்பதி 1307 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளனர்.

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கிரண் படேல் மற்றும் அவர் மனைவி பல்லவி படேல் ஆகியோர் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மருத்துவ சேவை நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் கிரண் படேல் மற்றும் பல்லவி படேல் ஆகிய இருவரும் சேர்ந்து மியாமியைச் சேர்ந்த நோவா சவுத் ஈஸ்டன் பல்கலைக்கழகத்துக்கு 1307 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர்.

நோவா சவுத் ஈஸ்டன் பல்கலைகழகம் தம்பாவில் புதிய மருத்துவமனை வளாகம் ஒன்றை கட்டவுள்ளது. இதற்கான செலவுகளை ஈடுகட்டவே தம்பதி பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்கள்.