கேரளாவில் 7 வயதுச் சிறுமிக்கு நடந்த கொடுமை!!

577

கேரளாவில் 7 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் அருகே அஞ்சல் என்ற பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி பள்ளி முடிந்து டியூசனுக்கு சென்றுள்ளார்.

டியூசனுக்கு பிறகு மாணவி வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் ரயில்வே நிலையத்தில் வைத்து அவரது உறவினரான ராஜேஷ் என்பவருடன் சிறுமி பேசிக்கொண்டிருந்தது சிசிடிவி கமெராவில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ராஜேஷிடம் விசாரணை நடத்தியதில், முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். சந்தேகத்தில் அடிப்படையில் பொலிசார் அவரை விசாரணை நடத்தியதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து குளத்துப்புலா பகுதியில் புதைத்ததாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, புதைக்கப்பட்ட சிறுமியின் உடலை பொலிசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

ராஜேஷை கைது செய்த பொலிசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.