இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த தாய் : கதறி அழுத குழந்தை!!

573

திருப்பூரில் பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புறவழிச்சாலையில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடக்க, அவரின் சடலத்திற்கு அருகில் ஒன்றரை வயதுள்ள ஆண் குழந்தை அழுதுகொண்டே இருந்துள்ளது.

இதனைப்பார்த்த சிலர் பொலிசிற்கு தகவல் தெரிவத்ததையடுத்து, விரைந்து வந்த பொலிசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், குழந்தையையும் மீட்டு அந்த குழந்தை யார்? இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.