வவுனியா விபுலானந்தாக் கல்லூரியில் மூன்று தினங்கள் வாணி விழா சிறப்பாக நடைபெறுகிறது. நேற்று முன்தினம் 27.09.2017 புதன்கிழமை இரண்டாம் நாள் விழா கல்லூரி அதிபர் சு.அமிர்தலிங்கம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்துமாமன்றப் பொறுப்பாசிரியர் பிரம்மஸ்ரீ எஸ் .சுந்தரசர்மா மற்றும் செயலாளர் திருமதி வாஹினி நாகரட்ணம் ஏற்பாட்டில் வாணி விழா நடைபெற்று வருகிறது.
மாணவ மாணவிகளின் பல்வேறு வகையான இயல் இசை நாடக நிகழ்வுகளும் விருந்தினர்களின் உரைகளும் இடம்பெற்றுவருகிறன.
இந்த நிகழ்வுகளில் முதன்மை விருந்தினராக மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் இன்தமிழ் இனியன் செ.ஸ்ரீநிவாசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்து மாமன்றத்தினர் ஏற்பாட்டில் ‘நவராத்திரியும் மாணவ மாண்பும்’ என்ற தலைப்பில் சிறப்புச்சொற்பொழிவாற்றினார் .
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் இந்துமாமன்றத்தின் ஏற்பாட்டால் வழங்கி வைக்கப்பட்டன.

















